Video Transcription
என் பெயர் தீபன். என்னுடைய மாமா சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
அவரிடம் போனில் பேசும்போதெல்லாம் 'சிங்கப்பூர் வாடா மாப்பிள்ளை வந்து ஒரு மாதம் தங்கி விட்டுப் போ' என்று பலமுறை சொல்லுவார்.
நானும் அவரிடம் வருகிறேன் மாமா என்று சும்மா பேச்சுக்காகச் சொல்லிக் கொண்டு வந்தேன்.
அதன் பின் சிறிது மாதங்களாகவே எனக்குள் வெளியூர் சென்று தங்கவேண்டும் என்று மனத்துக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.
சரி எங்க போவது என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது நம்முடைய மாமாவும் ரொம்ப நாட்களாகவே 'சிங்கப்பூர் வாடா' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.